.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு
Showing posts with label southern railway. Show all posts
Showing posts with label southern railway. Show all posts

Wednesday, February 29, 2012

முன்னெல்லாம் க்ளார்க்குகள் டீ குடிக்க போய்ருவாய்ங்க




முன்னரெல்லாம் கிளார்க்குகள் பத்து மணிக்கு உள்ளே வந்து மாங்க் மாங்குன்னு வேலை பார்த்து விட்டு பன்னெண்டு மணிக்கு ஒரு டீ யைக் குடித்து விட்டு (அதுக்குள்ளே டீ குடிக்கப் போய்ட்டாய்ங்களா என நாட்டு மக்கள் புலம்புவார்கள், அது வேறே விஷயம்) மறுபடியும் மாங்க் மாங்க்குன்னு வேலை பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு நாக்குத் தள்ளிப் போய் வீட்டுக்கு ஓடுவார்கள்.  ஒன்னு அம்பத்தைம்போதுக்கு  ஒருத்தன் உள்ளே வந்து கதவைச் சாத்துவதைப் பார்த்துவிட்டு ஒரு மொட்டையைத் தட்டிவிட்டு அதுக்கு ஒரு எங்கொயரியும் நடக்கும், யூனியனும் காப்பாத்தும்.   இதுதான் பேங்கு, போஸ்ட் ஆபீஸ், எல்.ஐ.சி, தாலுக்காபீஸ், கலெக்டரேட், ரயில்வே புக்கிங்க் என்று எல்லா இடத்திலும் நடந்தது.

இப்போ எல்லோர் முன்னாடியும் ஒரு கம்ப்யூட்டர் உட்கார்ந்திருக்கு.  அதுக்கு டீயை ஊற்றினால் பத்தாது.  புகைந்து விடும்.  கரண்ட் வேணும்.  ஒரு கம்யூட்டருக்கு 100 வாட்ஸ் என்றால் இப்போ ஒரு பத்து கோடி கம்ப்யூட்டர் என்றால் ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரம் இதுக்கு தேவை.

ஆக ஒரே ஒரு டீயில ஓடிக்கிட்டிருந்த நாடு இப்போ கண்டபடி வளர்ந்து முட்டிக்கிட்டு நிக்குது.  திரும்ப பளுப்புக் கலர் பேப்பர் பால் பாயிண்ட் பேனா என மாற்றிவிடலாம். அதுதான் நல்லது.

Friday, February 17, 2012

ஏற்கனவே ரயில் பயணம் பாதுகாப்பா இல்லே. இப்ப வரியை வேறு விதிச்சீங்கன்னா மணிபர்சுக்கும் பாதுகாப்பு இல்லை.


ரயில் டிக்கெட் மீது பாதுகாப்பு வரி விதிப்பு?

கருத்துகள்

புதுடெல்லி, : ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என்று உயர்மட்டக் குழு கூறியுள்ளது. மேலும், இதற்காக ரயில் டிக்கெட் கட்டணத்தில் பாதுகாப்பு வரி விதிக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும், பாதுகாப்புக்கான புதிய திட்டங்களை வகுக்கவும் அணுசக்தி கழக முன்னாள் தலைவர் அனில் ககோத்கர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று இக்குழு கூறியுள்ளது. மொத்தம் 19 ஆயிரம் கி.மீ. ரயில் பாதைகளில் பாதுகாப்பு சிக்னல்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கோடி, எல்லா லெவல் கிராசிங்கிலும் பாலம் அமைக்க ரூ.50 ஆயிரம் கோடி, பாதுகாப்பான வகையில் ரயில் பெட்டிகளை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி மற்றும் ரயில் பாதுகாப்பு பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும் குழு கூறியுள்ளது.

மேலும், ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில், ரயில் டிக்கெட் கட்டணத்தில் புதிதாக பாதுகாப்பு வரி விதிக்கலாம் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி திரட்டலாம் என்றும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் கண்டிப்பாக உயரும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு வரி விதிக்கும் பரிந்துரையை ரயில்வே அமைச்சகம் ஏற்றால், ரயில் டிக்கெட் கட்டணம் நிச்சயமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.