.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Thursday, February 16, 2012

கிணற்றுக்குள் வேன் விழுந்தது : 25 அடி உயர தண்ணீரில் இருந்து மீள முடியாமல் 10 பேர் பலி

கிணற்றுக்குள் வேன் விழுந்தது : 25 அடி உயர
தண்ணீரில் இருந்து மீள முடியாமல் 10 பேர் பலி


தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர், சதீசுவரன். இவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல்-முருகம்மாள் தம்பதியின் மகள் உமா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப்பின் மணமக்களை, பெண்ணின் உறவினர்கள் தேவாரத்தில் உள்ள மணமகனின் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஒரு வேனில் தேவாரத்திற்கு சென்றனர். அங்கு மணமக்களை மணமகன் வீட்டில் விட்டபின் அனைவரும் அந்த வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.


நக்கலக்கோட்டை அருகே இரவு 7 மணி அளவில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய வேன் தறிகெட்டு இடதுபுறமாக ஓடி ரோட்டின் அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். அவர்களில் 3 பேர் வேனுக்குள் இருந்து வெளியே தப்பி தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்தனர்.

வேன் கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டும், வேனில் இருந்தவர்களின் மரண ஓலத்தை கேட்டும் நக்கலக்கோட்டை கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

கிணற்றுக்குள் 3 பேர் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்த வாலிபர்கள் கிணற்றுக்குள் குதித்து அந்த 3 பேரை மீட்டனர். அவர்களில் ஒருவர் விருதுநகர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜாக்கனியின் மகன் மாதவன், மணி, சாயல்குடியை சேர்ந்த கருப்புச்சாமி என்று தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


கிணற்றின் அருகே மின்விளக்கு வசதியும் இல்லாததால் அங்கிருந்தவர்கள் டார்ச்லைட், மண்எண்ணை விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கை கொண்டு வந்தனர்.

அதற்குள் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வேனுக்குள் இருப்பவர்களை மீட்க போராடினர்.

அந்த கிணறு 50 அடி ஆழ கிணறாக இருந்தது. அதில் 25 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் தீயணைப்பு படையினரின் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. வேனில் மொத்தம் 13 பேர் வந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டதால் மீதம் உள்ள 10 பேரும் இறந்து விட்டதாக தெரிகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே சாவு எண்ணிக்கை உறுதியாக தெரியும் என்று போலீசாரும், தீயணைப்பு படையினரும் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது இரவு 7 மணி இருக்கும். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிக்கு வசதியாக சக்தி வாய்ந்த விளக்குகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் கிணற்றுக்குள் விழுந்த வேனை மீட்பதற்காக கிரேன் எந்திரமும் கொண்டு செல்லப்பட்டது. இரவு 11 மணி அளவில் வேன் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அதில் கிடந்த உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மாதிரி காவு வாங்கும் கிணறுகளை அரசே மூடிவிடலாம்

No comments:

Post a Comment