.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, February 17, 2012

டீச்சரைக் கொலை பண்ணி நாடு முன்னேறிருச்சுன்னு எழுதி ஒரு வாரம் ஆகலே, இப்ப பயல்களுக்குள் துப்பாக்கிச் சண்டை



கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை


பஞ்சாபில்

கருத்துகள்


அமிர்தசரஸ் : பஞ்சாபில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகலிகலம் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்துள்ளது. இது பற்றி ஆசிரியர்களுக்கு கூட தெரியாது. இந்த மாணவர்கள் வெளியில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த சண்டை நேற்று முன்தினம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

காலையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவர்கள், ஓருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், பள்ளி மைதானத்துக்கு ஹாக்கி மட்டை போன்றவற்றுடன் சென்று சண்டை போட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி, அலறியபடி ஓடினர்.

துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்களுக்கு காலில் குண்டு பாய்ந்தது. கீழே விழுந்த அவர்கள் துடிதுடித்தனர். அதற்குள் ஆசிரியர்களுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்தனர். போலீசார் வரவழைக்கப்பட்டனர். சண்டை போட்ட 2 கோஷ்டி மாணவர்களும் தப்பி விட்டனர். காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட 2 மாணவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து துப்பாக்கி கிடைத்தது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மாணவர்கள் துப்பாக்கி சண்டை போட்டது, பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment