முன்னரெல்லாம் கிளார்க்குகள் பத்து மணிக்கு உள்ளே வந்து மாங்க் மாங்குன்னு வேலை பார்த்து விட்டு பன்னெண்டு மணிக்கு ஒரு டீ யைக் குடித்து விட்டு (அதுக்குள்ளே டீ குடிக்கப் போய்ட்டாய்ங்களா என நாட்டு மக்கள் புலம்புவார்கள், அது வேறே விஷயம்) மறுபடியும் மாங்க் மாங்க்குன்னு வேலை பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு நாக்குத் தள்ளிப் போய் வீட்டுக்கு ஓடுவார்கள். ஒன்னு அம்பத்தைம்போதுக்கு ஒருத்தன் உள்ளே வந்து கதவைச் சாத்துவதைப் பார்த்துவிட்டு ஒரு மொட்டையைத் தட்டிவிட்டு அதுக்கு ஒரு எங்கொயரியும் நடக்கும், யூனியனும் காப்பாத்தும். இதுதான் பேங்கு, போஸ்ட் ஆபீஸ், எல்.ஐ.சி, தாலுக்காபீஸ், கலெக்டரேட், ரயில்வே புக்கிங்க் என்று எல்லா இடத்திலும் நடந்தது.
இப்போ எல்லோர் முன்னாடியும் ஒரு கம்ப்யூட்டர் உட்கார்ந்திருக்கு. அதுக்கு டீயை ஊற்றினால் பத்தாது. புகைந்து விடும். கரண்ட் வேணும். ஒரு கம்யூட்டருக்கு 100 வாட்ஸ் என்றால் இப்போ ஒரு பத்து கோடி கம்ப்யூட்டர் என்றால் ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரம் இதுக்கு தேவை.
ஆக ஒரே ஒரு டீயில ஓடிக்கிட்டிருந்த நாடு இப்போ கண்டபடி வளர்ந்து முட்டிக்கிட்டு நிக்குது. திரும்ப பளுப்புக் கலர் பேப்பர் பால் பாயிண்ட் பேனா என மாற்றிவிடலாம். அதுதான் நல்லது.
No comments:
Post a Comment